2 Aug 2013

3rd August 2013 (Saturday) << எப்போதும் உண்மையாய் >>

MAY GRACE & PEACE OF OUR LORD JESUS CHRIST FILL US TODAY!

Having trouble viewing this email? READ HERE. Please add wordoflordtamil@gmail.com to your email address book.

WORD of LORD

<< TO WALK WITH GOD TODAY & EVER >>

<< GRACE INDIA MINISTRIES >>

3rd August  2013 (Saturday)

= இன்றைய வார்த்தை =

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான். (நீதி 28:20)

= இன்றைய சங்கீதப் பகுதி =

கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது(100:5)

 

= இன்றைய நீதிமொழி =

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.(12:22)

= ன்றைய தியானம் =

<< எப்போதும் உண்மையாய் >>

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

ஒரு அரசன் இருந்தான். தனக்கு வாரிசு இல்லாததினால் தன் நாட்டு மக்களில் ஒருவனை அடுத்த அரசனாக தெரிவு செய்ய விரும்பினான். அதை தண்டோரா போட்டு அறிவிக்கச்செய்தான். அரசனாகும் ஆசையில் வந்தவர்களுக்கு அநேக போட்டிகள் வைக்கப்பட்டது. அனைத்துப் போட்டிகளிலும் 5 பேர் முன்னிலை வகித்தார்கள். அந்த 5 பேருக்கும் கடைசியாக ஒரு சோதனையை அரசன் ஆயத்தம் செய்திருந்தான். அந்த 5 பேரையும் அழைத்து அவர்கள் கையில் ஒவ்வொரு விதையைக் கொடுத்து, "உங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுக்கிறேன். யார் இந்த விதையை தொட்டியில் விதைத்து, முடிந்த வரை பெரிதாக வளர்த்திக் காண்பிக்கிறீர்களோ, அவர்களே அடுத்த அரசன்" என்று கூறினான். விதையை வாங்கிச் சென்ற 5 பேரும் விதையை ஒரு தொட்டியில் போட்டு, உரம் போட்டு, தண்ணீர் ஊற்றி பராமரித்தார்கள். 3 நாட்களாகியும் விதை முளைக்கவில்லை. 3 பேர் அரசனாகும் ஆசையில் யாருக்கும் தெரியாமல், வளர்ந்த செடி ஒன்றை தொட்டியில் வைத்து வளர்க்க ஆரம்பித்தார்கள். ஒருவாரம் கழித்து 5 பெரும் அரசனைச் சந்திக்கச் சென்றார்கள். 3 பேர் வளர்ந்த செடியோடும், 2 பேர் வெறும் தொட்டியோடும் சென்றார்கள். அரசன் அந்த 2 பேரிடமும் "உங்களிடம் கொடுத்த விதை என்னாயிற்று?" என்று கேட்டான். "மன்னா, அதை இந்த தொட்டியில்தான் போட்டு, உரமிட்டு, தண்ணீர் ஊற்றி பராமரித்தோம் ஆனால், எதுவும் வளரவில்லை" என வருத்தப்பட்டு சொன்னார்கள்!

உடனே, அரசன், அந்த 3 பேரையும் பார்த்து, "திருட்டுப் பயல்களா! நான் உங்களுக்கு வேகவைத்த விதைகளைக் கொடுத்தேன். ஒரு நாட்டை அரசாள, முதலில் வாழ்வில் உண்மை வேண்டும். நீங்கள் என்னை ஏமாற்ற நினைத்தீர்கள்! இவர்களைத் தூக்கி சிறையில் போடுங்கள்!" என்றான். உண்மையாய் நடந்த மற்ற 2 பேரையும், அவர்களின் தகுதிப்படி, ஒருவனை அடுத்த அரசனாகவும், மற்றவனை முதன்மை மந்திரியாகவும் நியமித்து உத்தரவிட்டான்!

அரசனுக்கு மட்டுமல்ல, நம் ஆண்டவருக்கும் உண்மையாக இருப்பது மிக முக்கியம்! சில நேரங்களில் அஸ்திபாரமே ஆடும் அளவுக்கு சோதனை வரும். அந்த நிலையிலும் உண்மை வேண்டும்.

ஆபிரகாம், தன் மகன் ஈசாக்கு மீது கத்தியை ஓங்கும் வரை தன் உண்மைத்தன்மையில் சோதித்துப் பார்க்கப்பட்டார். ஆசீர்வதிக்கப்பட்டார்.

அனனியா-சப்பீராள் உண்மையில்லாதபடியால், குடும்பமாய் மரித்துப்போனார்கள்.

மோசே எங்கும் உண்மையுள்ளவராக இருந்தார்.

ஆண்டவராகிய இயேசு எல்லாவற்றிலும், எப்போதும், யாரைவிடவும், உண்மையுள்ளவராக இருக்கிறார்.

நாம் வேலை செய்யும் இடத்தில், படிப்பில், சபையில், ஊழியத்தில், பெற்றோரிடம் என நாம் எங்கும் உண்மையாக இருப்பது, நம் ஆண்டவரிடம் உண்மையாக இருப்பதே! உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ, உண்மையாக நடக்க முடியாமல், தண்டனைக்கு உள்ளாவான்! நாம் எப்படி?

 

ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன். (வெளி 2:10) ஆமென்!

 

ஜெபம் செய்வோம் =

அன்பின் பரலோகப் பிதாவே! உண்மையுள்ளவரே, நாங்களும் உமக்கு உண்மையாய் நடக்க எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். பொய்க்குப் பிதாவான பிசாசின் கிரியைகளைவிட்டு விலக உதவிடும்! உமக்கு நன்றி! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்!

= ங்கள் கவனத்திற்கு =

(WORD of LORD) தியானத்தை ஒருவருக்காவது பகிர்ந்து, கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்!

Visit Us : http://graceindiaministries.blogspot.in/

E-Mail ID : graceindiaministries@gmail.com

Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

PREPARED AND DISTRIBUTED ONLY FOR CHRISTIANS THOSE WHO TRUST OUR ALMIGHTY & TRINITY GOD

GRACE India Ministries  (+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)

MAY GOD BLESS & LEAD YOU TODAY & EVER….

TO UNSUBSCRIBE , KINDLY REPLY US  AS "UNSUBSCRIBE"

 

1 Aug 2013

2nd August 2013 << மயங்கிடாதே! >>

MAY GRACE & PEACE OF OUR LORD JESUS CHRIST FILL US TODAY!

Having trouble viewing this email? READ HERE. Please add wordoflordtamil@gmail.com to your email address book.

WORD of LORD

<< TO WALK WITH GOD TODAY & EVER >>

<< GRACE INDIA MINISTRIES >>

2nd August  2013 (Friday)

= இன்றைய வார்த்தை =

வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும்.(ஓசியா 4:11) 

= இன்றைய சங்கீதப் பகுதி =

என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.(116:8) 

= இன்றைய நீதிமொழி =

உன் இருதயம் அவள் வழியிலே சாயவேண்டாம்; அவள் பாதையிலே மயங்கித் திரியாதே. அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழப்பண்ணினாள்; பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள்.(7:25,26)

= ன்றைய தியானம் =

<< மயங்கிடாதே! >>

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!  

 சாது சுந்தர் சிங் ஐயா அவர்களது, ஊழியத்தின்போது, இமயமலையின் அடிவாரத்தில், ஓரிடத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கே, அழகான மலர்கள் பூத்துக்குழுங்கும் இடம் ஒன்றை கண்டார். அதன் நறுமணமும், அவரை சுண்டி இழுத்தது. அதனருகில் சென்று பார்த்துக்கொண்டிருந்தபோது, மிகவும் அதிகமாக தூக்கம் வரவே, நடைப்பயணத்தினாலே தான் அதிக சோர்வுற்று இருப்பதாக நினைத்து, அருகிலிருந்த ஒரு கல்லின்மேல் படுத்து உறங்கிவிட்டார்.

சிறிது நேரங்கழித்து யாரோ ஒருவர் தட்டியெழுப்ப, கண்விழித்தார் சாது. எழுப்பியவர் சொன்னார்! "ஐயா இங்கே உறங்காதீர்கள்! ஏனென்றால், இந்த மலர்களின் வாசனையில், மிகுந்த உறக்கம் வரும். அப்படி உறங்குபவர்கள், திரும்ப எழ முடியாதபடி, மயங்கி அப்படியே மரித்துப்போவார்கள். அப்படி மரித்துப்போன அனேகருடைய சடலங்கள், அருகாமையில்தான் புதைக்கப்பட்டிருக்கிறது" என்றார். அது கேட்டு வியப்புற்ற சாது சுந்தர் சிங் "ஐயா உமக்கு நன்றி!" என்று சொல்லி தேவனையும் துதித்து, நன்றி சொல்லி, அவ்விடம் விட்டுக் கடந்து போனாராம்.

உலகமும் கூட மிக அழகாய் நம்மை ஏமாற்றி, திரும்ப எழமுடியாதபடி, மயக்கிவிடக்கூடும! சில வாலிபப் பெண்கள், பிறர் பேச்சில் மயங்கிவிடக்கூடும்! சிலர் பணத்துக்கு மயங்கியிருப்பார்கள்! சில குடி, வெறி போன்ற இச்சைகள் நம்மை மயக்கிவிடக்கூடும்! சிலருக்கு அந்த மயக்கத்தினால், தாங்கள் இடறுகிறது இன்னதென்று கூட அறியமுடியாது! இப்போதும் கூட சிலர் எழுந்திருக்கமுடியாதபடி பாவங்களிலும், இச்சைகளிலும் மயங்கி சிக்கியிருக்கக்கூடும். பரிசுத்த வாழ்க்கையை இழந்து நிற்கக்கூடும். அனேகருக்கு பின்மாற்றம்!

கர்த்தரின் வார்த்தை நம்மை " மகனே! மகளே! மயக்கத்திலிருந்து எழுந்திரு! நான் உனக்கு புது வாழ்வை கொடுக்கிறேன் என அழைக்கிறது. எத்தனைபேருக்கு ஆண்டவர் இயேசுவின் அன்புக்குரல் கேட்டு எழ ஆயத்தம்? பின்மாற்றத்திலிருந்து விடுபட வாய்ப்பளிக்கிறார். மயக்கத்திலிருந்து எழ நம்மை, தம் வார்த்தைகளால், எழுப்புகிறார். எழுந்து அவர் சமூகத்தில் ஒப்புக்கொடுத்தால், நம்மை சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பெலப்படுத்தி, நிலை நிறுத்துவார்! நமக்கு கர்த்தராகிய இயேசுவின் பெயரால் இன்று விடுதலை!

அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.(மாற் 14:37,38) ஆமென்!

 

ஜெபம் செய்வோம் =

அன்பின் பரலோகப் பிதாவே! உலகத்தின் மயக்கம், இச்சைகள், பெருமைகள் யாவும் எங்களிட்த்தில் இராதபடி ஒரு விழிப்பைத் தாரும். பின்மாற்றங்களை மாற்றி, மீண்டும் எழும்பிப் பிரகாசிக்க உதவி செய்யும்! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்!

= ங்கள் கவனத்திற்கு =

(WORD of LORD) தியானத்தை ஒருவருக்காவது பகிர்ந்து, கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்!

Visit Us : http://graceindiaministries.blogspot.in/

E-Mail ID : graceindiaministries@gmail.com

Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

PREPARED AND DISTRIBUTED ONLY FOR CHRISTIANS THOSE WHO TRUST OUR ALMIGHTY & TRINITY GOD

GRACE India Ministries  (+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)

MAY GOD BLESS & LEAD YOU TODAY & EVER….

TO UNSUBSCRIBE , KINDLY REPLY US  AS "UNSUBSCRIBE"

 

31 Jul 2013

1st August 2013 (வியாழன்) << கர்த்தரின் கரங்கள் >>

MAY GRACE & PEACE OF OUR LORD JESUS CHRIST FILL US TODAY!

Having trouble viewing this email? READ HERE. Please add wordoflordtamil@gmail.com to your email address book.

WORD of LORD

<< TO WALK WITH GOD TODAY & EVER >>

<< GRACE INDIA MINISTRIES >>

1st August  2013 (வியாழன்)

= இன்றைய வார்த்தை =

எங்களைப் பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரங்களினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, எங்களை இவ்விடத்துக்கு அழைத்துவந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்.(உபா 26:8,9)

 

= இன்றைய சங்கீதப் பகுதி =

பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.(136:12)

 

= இன்றைய நீதிமொழி =

சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள். 31:20)

= ன்றைய தியானம் =

<< கர்த்தரின் கரங்கள் >>

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!  கர்த்தரின் கரங்கள்….

நம்மை உண்டாக்கிற்று (சங்கீ 119:73)

கிரியை செய்கிறது (சங்கீ 19)

அழகானவைகள் (உன் 5:14)

பராக்கிரமம் செய்கின்றது (சங்கீ118:16)

எகிப்துக்கு (பாவிகளுக்கு) வாதை கொடுக்கிறது (யாத் 9:3)

பலத்த கரங்கள் (யோசு 4:23)

பெலிஸ்தியருக்கு விரோதமானது (1 சாமு 7:13)

ஒருமனப்படுத்துகிறது (2 நாளா 30:12)

எஸ்றா மேலும், எஸ்றாவோடும் இருந்து நடத்தியது(எஸ்றா 7)

எல்லாவற்றையும் செய்கிறது (யோபு 12:9)

கர்த்தராகிய இயேசுவின் கரங்கள்:

குஷ்டரோகியை தொட்டு சுகமாக்கினது, பிசாசுகளை துரத்தியது, காற்றையும் கடலையும் அடக்கியது. அற்புதங்கள் செய்தது. மரித்த சடலங்களை உயிரோடு எழுப்பியது. யூதாசையும் சினேகிதனே என்றழைத்து அணைத்தது. நமக்காய் ஆணிகளால் அடிக்கப்பட்டது. உயிரோடு எழுந்து, விண்ணகம் சென்றது. ஆளுகை செய்யும் கரமாய், நியாயத்தீர்ப்பு செய்யும் கரமாய் வரப்போகின்றது! இன்றும் கிருபையோடு இருக்கின்றது!

அவர் கரங்களுக்குள் அடைக்கலம் புகுவோமா?

அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார். (வெளி 5:7) ஆமென்!

 

ஜெபம் செய்வோம் =

அன்பின் பரலோகப் பிதாவே! உம்முடைய கரங்கள் எங்கள் மீது நன்மையாக இருப்பதற்காக நன்றி! எங்கள் கரங்களால், உம்முடைய கரங்களைப் பிடித்துக் கொள்கிறோம்! இந்த மாதம் முழுவதும் உமது பரலோகப் பாதையில் நடத்தும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்!

= ங்கள் கவனத்திற்கு =

(WORD of LORD) தியானத்தை ஒருவருக்காவது பகிர்ந்து, கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்!

Visit Us : http://graceindiaministries.blogspot.in/

E-Mail ID : graceindiaministries@gmail.com

Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

PREPARED AND DISTRIBUTED ONLY FOR CHRISTIANS THOSE WHO TRUST OUR ALMIGHTY & TRINITY GOD

GRACE India Ministries  (+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)

MAY GOD BLESS & LEAD YOU TODAY & EVER….

TO UNSUBSCRIBE , KINDLY REPLY US  AS "UNSUBSCRIBE"

 

29 Jul 2013

30’ July 2013 << நம் வீடு எப்படி இருக்கிறது? >>

MAY GRACE & PEACE OF OUR LORD JESUS CHRIST FILL US TODAY!

Having trouble viewing this email? READ HERE. Please add wordoflordtamil@gmail.com to your email address book.

WORD of LORD

<< TO WALK WITH GOD TODAY & EVER >>

<< GRACE INDIA MINISTRIES >>

30' July 2013 (செவ்வாய்)

= இன்றைய வார்த்தை =

என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும். (ஏசா 56:7)

 

= இன்றைய சங்கீதப் பகுதி =

உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.(101:2)

 

= இன்றைய நீதிமொழி =

நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு.(15:6)

= ன்றைய தியானம் =

<< நம் வீடு எப்படி இருக்கிறது? >>

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

இந்த குறிப்பிட்ட வீடு, கைகளால் கட்டப்பட்ட வீடு அல்ல! நமது சரீரமே அந்த வீடு! வீட்டுக்கு வாசல் இருப்பது போல, நமது சரீரத்துக்கும் ஒன்பது வாசல்கள் உண்டு! அந்த ஒன்பது வாசல்களுமே பரிசுத்தமாக இருக்கவேண்டும்; கர்த்தரின் சித்தத்தின்படி பயன்படுத்தப்பட வேண்டும்!

உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே. (1 கொரி 6:15)

"வாய்" என்ற ஒரு வாசலை எடுத்துக்கொண்டால், உண்ணவும், பேசவும் மட்டுமன்றி, இயேசுவின் நாமத்தை சொல்லி, தேவனைத் துதிக்கவும், பரிசுத்த ஆவியால் நிரம்பி, நவமான மொழிகளைப் பேசவும், பயன்படுத்தலாமே.

"கண்கள்" எதைப் பார்க்கின்றன? பரிசுத்தமா? அசுத்தமா?

"காதுகள்" எதைக் கேட்கின்றன? தேவ வார்த்தைகளையா? மற்ற அசுத்தங்களையா?

"நாசித்துவாரங்கள்" கர்த்தரால், ஜீவ சுவாசம் ஊதப்பட்ட இடமல்லவா? புகைப்பிடித்து விடும், புகைபோக்கியல்லவே!

பிற "வாசல்கள்" விபச்சாரத்துக்கோ, வேசித்தனத்துக்கோ அல்ல! தேவனாகிய கர்த்தரால் அனுமதிக்கப்பட்ட காரியங்களுக்கே அன்றி, வேறொன்றுக்கும் இல்லை!

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. (ரோமர் 12:1)

வீட்டின் நடு மையமாகிய "இருதயம்" ஜெபவீடாக இல்லையென்றால், நம் சரீரமாகிய வீடு "கள்ளர் குகை"யே அன்றி வேறொன்றுமில்லை! வீடு பரிசுத்தமாக இருந்தால்தான், "வீடுபேறு" எனப்படும் பரலோக வாழ்வு கிடைக்கும்!

"என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்" என்றார்.( மத் 21:13) ஆமென்!

 

ஜெபம் செய்வோம் =

அன்பின் பரலோகப் பிதாவே! எங்கள் வீடாகிய சரீரத்தை பரிசுத்தமாய்ப் பாதுகாக்க உதவி செய்யும். வாசல்கள் பரிசுத்தமாக இருக்கட்டும்! அசுத்தங்கள் நீங்க சுத்திகரியும்! எங்கள் சரீரமாகிய ஆலயம் மெய்யான ஜெபவீடாக இருக்கட்டும்! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்!

= ங்கள் கவனத்திற்கு =

(WORD of LORD) தியானத்தை ஒருவருக்காவது பகிர்ந்து, கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்!

Visit Us : http://graceindiaministries.blogspot.in/

E-Mail ID : graceindiaministries@gmail.com

Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

PREPARED AND DISTRIBUTED ONLY FOR CHRISTIANS THOSE WHO TRUST OUR ALMIGHTY & TRINITY GOD

GRACE India Ministries  (+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)

MAY GOD BLESS & LEAD YOU TODAY & EVER….

TO UNSUBSCRIBE , KINDLY REPLY US  AS "UNSUBSCRIBE"

 

28 Jul 2013

29’ July 2013 << அற்பம்? அற்புதம்! >>

MAY GRACE & PEACE OF OUR LORD JESUS CHRIST FILL US TODAY!

Having trouble viewing this email? READ HERE. Please add wordoflordtamil@gmail.com to your email address book.

WORD of  LORD

<< TO WALK WITH GOD TODAY & EVER >>

<< GRACE INDIA MINISTRIES >>

29' July 2013 (திங்கள்)

= இன்றைய வார்த்தை =

லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள். லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள். (ஆதி 29:31,32)

= இன்றைய சங்கீதப் பகுதி =

உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.(22:24)

 

= இன்றைய நீதிமொழி =

என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.(3:11)

= ன்றைய தியானம் =

<< அற்பம்? அற்புதம்! >>

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

அற்பமாக எண்ணப்படுகிறவர்களைக் கர்த்தர் காண்கிறார். (நாம் இருக்கின்ற சூழ்நிலையில்), படிக்கின்ற இடத்திலா? பணிபுரியும் இடத்திலா? ஊழியத் தளத்திலா? சகோதரர்கள் நடுவிலா? நண்பர்கள் கூட்டத்திலா? எங்கு, எவர் நம்மை அற்பமாக எண்ணிணாலும் சரி! கர்த்தராகிய இயேசு தமது அற்புதத்தின் மூலம் நம்மை உயர்த்த வல்லவர்.

நாம் செய்யவேண்டியது என்ன? அவரிடம் வந்து, நம்பிக்கையோடு, வேண்டிக்கொள்வது மட்டுமே! மனிதர்கள் நம்மேல் பரிதாபம்தான் கொள்ள முடியும். கர்த்தர் ஒருவரால்தான் நமது கேள்விகளுக்கெல்லாம் பதிலாக ஓர் அற்புதம் செய்யமுடியும்.

ஆதி 29:31,32 ல் லேயாள் கண்ட அற்புதம்!

நீதி 30:25 ல் எறும்பு பெற்ற சேமிக்கும் குணாதிசயம்!

அப்போஸ் 4:11 ல் இயேசு மூலைக்கு தலைக்கல்லான அற்புதம்!

1 கொரி 1:28 ல் இழிவானவைகள் தெரிந்துகொள்ளப்பட்ட அற்புதம்!

அற்பமாய் ஆடுமேய்த்த தாவீது அரசனாக மாறிய அற்புதம்!

அடிமையாய் இருந்த யோசேப்பு உயர்த்தப்பட்ட அற்புதம்!

அற்பமாய் எண்ணப்பட்ட யோபு, மீண்டும் துளிர்த்தெழுந்த அற்புதம்!

அடிமைத்தனமான வாழ்விலும், மேன்மைபெற்ற தானியேல் கண்ட அற்புதம்!

இன்றும் நம்மை மாற்ற காத்திருக்கிறது. நம் நேசரை நோக்கிக் கூப்பிடுவோமா?

இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்( மத் 18:10) ஆமென்!

 

ஜெபம் செய்வோம் =

அன்பின் பரலோகப் பிதாவே! அற்பமாய் எண்ணப்படுகின்ற எங்கள் வாழ்வில் ஓர் அற்புதம் செய்யப்போவதற்காக ஸ்தோத்திரம்! உம்மை நோக்கிக் கூப்பிடுகிறோம். உயர்த்தும்! வழி நடத்தும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்!

= ங்கள் கவனத்திற்கு =

"கர்த்தரின் வார்த்தை" (WORD of LORD) தியானத்தை குறைந்தபட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து, பிறர் தியானிக்கச் செய்யுங்கள்!

Visit Us : http://graceindiaministries.blogspot.in/

E-Mail ID : graceindiaministries@gmail.com

Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

PREPARED AND DISTRIBUTED ONLY FOR CHRISTIANS THOSE WHO TRUST OUR ALMIGHTY & TRINITY GOD

GRACE India Ministries (+91 99524 27477, +91 9843724467, +91 99945 99677, +91 99940 16570)

TO UNSUBSCRIBE , KINDLY REPLY AS "UNSUBSCRIBE"

MAY GOD BLESS & LEAD YOU TODAY & EVER….