28 Jul 2013

29’ July 2013 << அற்பம்? அற்புதம்! >>

MAY GRACE & PEACE OF OUR LORD JESUS CHRIST FILL US TODAY!

Having trouble viewing this email? READ HERE. Please add wordoflordtamil@gmail.com to your email address book.

WORD of  LORD

<< TO WALK WITH GOD TODAY & EVER >>

<< GRACE INDIA MINISTRIES >>

29' July 2013 (திங்கள்)

= இன்றைய வார்த்தை =

லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள். லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள். (ஆதி 29:31,32)

= இன்றைய சங்கீதப் பகுதி =

உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.(22:24)

 

= இன்றைய நீதிமொழி =

என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.(3:11)

= ன்றைய தியானம் =

<< அற்பம்? அற்புதம்! >>

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

அற்பமாக எண்ணப்படுகிறவர்களைக் கர்த்தர் காண்கிறார். (நாம் இருக்கின்ற சூழ்நிலையில்), படிக்கின்ற இடத்திலா? பணிபுரியும் இடத்திலா? ஊழியத் தளத்திலா? சகோதரர்கள் நடுவிலா? நண்பர்கள் கூட்டத்திலா? எங்கு, எவர் நம்மை அற்பமாக எண்ணிணாலும் சரி! கர்த்தராகிய இயேசு தமது அற்புதத்தின் மூலம் நம்மை உயர்த்த வல்லவர்.

நாம் செய்யவேண்டியது என்ன? அவரிடம் வந்து, நம்பிக்கையோடு, வேண்டிக்கொள்வது மட்டுமே! மனிதர்கள் நம்மேல் பரிதாபம்தான் கொள்ள முடியும். கர்த்தர் ஒருவரால்தான் நமது கேள்விகளுக்கெல்லாம் பதிலாக ஓர் அற்புதம் செய்யமுடியும்.

ஆதி 29:31,32 ல் லேயாள் கண்ட அற்புதம்!

நீதி 30:25 ல் எறும்பு பெற்ற சேமிக்கும் குணாதிசயம்!

அப்போஸ் 4:11 ல் இயேசு மூலைக்கு தலைக்கல்லான அற்புதம்!

1 கொரி 1:28 ல் இழிவானவைகள் தெரிந்துகொள்ளப்பட்ட அற்புதம்!

அற்பமாய் ஆடுமேய்த்த தாவீது அரசனாக மாறிய அற்புதம்!

அடிமையாய் இருந்த யோசேப்பு உயர்த்தப்பட்ட அற்புதம்!

அற்பமாய் எண்ணப்பட்ட யோபு, மீண்டும் துளிர்த்தெழுந்த அற்புதம்!

அடிமைத்தனமான வாழ்விலும், மேன்மைபெற்ற தானியேல் கண்ட அற்புதம்!

இன்றும் நம்மை மாற்ற காத்திருக்கிறது. நம் நேசரை நோக்கிக் கூப்பிடுவோமா?

இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்( மத் 18:10) ஆமென்!

 

ஜெபம் செய்வோம் =

அன்பின் பரலோகப் பிதாவே! அற்பமாய் எண்ணப்படுகின்ற எங்கள் வாழ்வில் ஓர் அற்புதம் செய்யப்போவதற்காக ஸ்தோத்திரம்! உம்மை நோக்கிக் கூப்பிடுகிறோம். உயர்த்தும்! வழி நடத்தும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்!

= ங்கள் கவனத்திற்கு =

"கர்த்தரின் வார்த்தை" (WORD of LORD) தியானத்தை குறைந்தபட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து, பிறர் தியானிக்கச் செய்யுங்கள்!

Visit Us : http://graceindiaministries.blogspot.in/

E-Mail ID : graceindiaministries@gmail.com

Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

PREPARED AND DISTRIBUTED ONLY FOR CHRISTIANS THOSE WHO TRUST OUR ALMIGHTY & TRINITY GOD

GRACE India Ministries (+91 99524 27477, +91 9843724467, +91 99945 99677, +91 99940 16570)

TO UNSUBSCRIBE , KINDLY REPLY AS "UNSUBSCRIBE"

MAY GOD BLESS & LEAD YOU TODAY & EVER….

 

0 comments:

Post a Comment