16 Jul 2013

17th July 2013 << கர்த்தர் நாமம் >>

MAY GRACE & PEACE OF OUR LORD JESUS CHRIST FILL US TODAY!

Having trouble viewing this email? READ HERE. Please add wordoflordtamil@gmail.com to your email address book.

WORD of  LORD

<< TO WALK WITH GOD TODAY & EVER >>

<< GRACE INDIA MINISTRIES >>

17th July 2013 (புதன்)

= இன்றைய வார்த்தை =

அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.(உபா 28:10)

 

= இன்றைய சங்கீதப் பகுதி =

அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும்; மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா ஜாதிகளும் அவரைப் பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள். (72:17)

 

= இன்றைய நீதிமொழி =

வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ? (30:4)

= ன்றைய தியானம் =

<< கர்த்தர் நாமம் >>

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!  நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். (ஏசாயா 9:6) சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவன், அன்புள்ள குமாரனாக வெளிப்பட்டார். இன்றைய நாட்களில், வல்லமை மிக்க தூய ஆவியானவராக செயல்படுகிறார். அவர் இயேசு கிறிஸ்து எனும் பெயரின் வல்லமையால், பிதாவாகிய தேவன் மகிமைப்படும்படியாக, இன்றும் அற்புதங்கள்; அதிசயங்கள் செய்கிறார்.

திரித்துவம் என்ற வார்த்தை, வேதத்தில் இல்லாவிட்டாலும் கூட, மூவரும் ஒருவராக நம்மில் வாசம் செய்கிறார்கள் என்று வேதத்தில் நாம் வாசிக்கலாம். யார் அந்த கடவுள்? அவர் பெயர் என்ன? அவரை எப்படி அழைப்பது? என்று கேட்டால், வேதம் திட்டமும் தெளிவுமாகப் போதிக்கிறது, அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்று! தன்னை மூன்று விதங்களில் வெளிப்படுத்தும் தேவனாகிய கர்த்தருக்கு குழப்பமில்லை! அவர் ஒருவரே! ஆனால் ஆதாய ஊழியத்தில் குழப்பங்கள் மிக அதிகமே! விசுவாசிகளை நன்றாகக் குழப்பினால்தானே, அந்த குட்டையில் என்ற மீன் பிடிக்க முடியும்!

பிதாவாகிய தேவனை ஒதுக்கவும் கூடாது! கர்த்தராகிய இயேசு மட்டும்தான் என எண்ணவும் கூடாது! பரிசுத்த ஆவியானவரை இழிவுபடுத்தவும் (மட்டுப்படுத்த) கூடாது! மூன்று பேரும் சரிசமமே!

சரியான ஜெபம் என்பது, பிதாவாகிய தேவனிடம், பரிசுத்த ஆவியினாலே நிறைந்து, கர்த்தராகிய இயேசுவின் பெயரால் வேண்டிக்கொள்வதுதான்! கிறிஸ்துவும் அதைத்தானே கற்றுக்கொடுத்தார்! குமாரனன்றி, பிதாவுமில்லை! பிதாவையன்றி குமாரனுமில்லை! தூய ஆவியானவருமில்லை! (யோவான் 17). உலகப் படைப்பிலிருந்து கடைசி வரை மூவரும் ஒருவரே!

பிதாவை மகிமைப்படுத்துவோம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை கனப்படுத்துவோம்! தூய ஆவியினால் நிறைந்திருப்போம்! அவர் நமக்கு சகலத்தையும், தெளிவாக போதித்து வழி நடத்துவார். ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுவின் நாமத்தைப் பயன்படுத்தி, பிதாவாகிய தேவன் மகிமைப்படும்படியாக, தூய ஆவியானவர் வழியாக, அனைத்தையும் செய்து முடிக்க, கர்த்தர் தம் நாமத்தை நம் நெற்றிகளில் எழுதி வைத்திருக்கிறார்! தெளிவோம்! ஜெபிப்போம்! ஜெயிப்போம்!

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.(நீதி 18:10) ஆமென்!

 

ஜெபம் செய்வோம் =

அன்பின் பரலோகப் பிதாவே! உமது வார்த்தைகளுக்கு நன்றி! உம்மைப் புரிந்துகொள்ள உதவி செய்ததற்காக உமக்கே ஸ்தோத்திரம்! தூய ஆவியானவர் எங்களை, உமது வார்த்தைகளின்படியே செம்மையான வழியில் நட்த்த எங்களை ஒப்புவிக்கிறோம்! மீட்பரும்; இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்!

= ங்கள் கவனத்திற்கு =

"கர்த்தரின் வார்த்தை" (WORD of LORD) தியானத்தை குறைந்தபட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து, பிறர் தியானிக்கச் செய்யுங்கள்!

Visit Us : http://graceindiaministries.blogspot.in/

E-Mail ID : graceindiaministries@gmail.com

Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

PREPARED AND DISTRIBUTED ONLY FOR CHRISTIANS THOSE WHO TRUST OUR ALMIGHTY & TRINITY GOD

GRACE India Ministries (+91 99524 27477, +91 9843724467, +91 99945 99677, +91 99940 16570)

 

TO GET THIS FREE DAILY DEVOTION TO YOUR EMAIL, KINDLY SMS YOUR EMAIL ID TO ABOVE NUMBERS OR

MAIL US AS "SUBSCRIBE".  TO UNSUBSCRIBE , KINDLY MAIL US AS "UNSUBSCRIBE"

MAY GOD BLESS & LEAD YOU TODAY & EVER….

 

0 comments:

Post a Comment