2 Jul 2013

03rd July 2013 << இடறலின்றி நடப்போம் >>

MAY GRACE & PEACE OF OUR LORD JESUS CHRIST FILL US TODAY!

Having trouble viewing this email? READ HERE. Please add wordoflordtamil@gmail.com to your email address book.

WORD of  LORD

<< TO WALK WITH GOD TODAY & EVER >>

<< GRACE INDIA MINISTRIES >>

03rd  July 2013 (செவ்வாய்)

= இன்றைய வார்த்தை =

நீங்கள் இடறலடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். (யோவான் 16:1)

 

= இன்றைய சங்கீதப் பகுதி =

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை. (119:165)

 

= இன்றைய நீதிமொழி =

நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள். (24:16)

= ன்றைய தியானம் =

<< இடறலின்றி நடப்போம் >>

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!  இடறல்கள் அனைவரது வாழ்விலும் சாத்தியமே! எப்போது இடறல்கள் வரும் என அறியாதிருப்பதால், எப்போதுமே எச்சரிக்கை அவசியம். எனவேதான், விழிப்பான ஜெபம் அவசியம்.

சுய ஆசை, இச்சைகள் இடறவைக்கும்; பிறரின் வஞ்சகப்பேச்சுக்கள் இடறவைக்கும். இடறல்கள் வராதிருப்பது கூடாத காரியம், அது எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

கர்த்தர் நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். கிருபையுள்ள தேவன் அவர். நம்மை இடறலுக்கு தப்புவிக்க விரும்புகிறார். நல்ல ஆலோசனைகளைத் தம் வேதவசனங்கள் மூலம் தந்து, ஞானமாய் வழி நடத்துகிறார். மெய்யான உபதேசங்களைவிட்டு வழிவிலகச்செய்யும், வயிற்றுக்கு ஊழியம் செய்யும் மனிதரை விட்டும் நாம் விலகியிருக்க அப். பவுல் அடிகளார் மூலம் வேண்டுகிறார். (ரோமர் 16:17). மூன்று வருடங்கள், கிறிஸ்துவோடு உண்டு, உறங்கி, ஊழியம் செய்த சீஷர்களுக்கே, அவர்கள் இடறலடையாதபடி வாழ, கர்த்தர் போதித்தார் என்றால், நமக்கு எவ்வளவு அதிகம்? வார்த்தை நமக்கு வழிகாட்டுவதாக!

 

நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ? ( சங்கீதம் 56:13)  ஆமென்!

 

ஜெபம் செய்வோம் =

அன்பின் பரலோகப் பிதாவே! உமக்கு ஸ்தோத்திரம். இடறலுக்கும், அதை உண்டாக்கும் அனைத்திற்கும் எங்களைத் தப்புவித்து, உம் வார்த்தைகளின்படி பரிசுத்தமாய், தூய ஆவியானவரின் துணையுடன் வாழ உதவி செய்யும். இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், நல்ல பிதாவே, ஆமென்!

= ங்கள் கவனத்திற்கு =

"கர்த்தரின் வார்த்தை" (WORD of LORD) தியானத்தை குறைந்தபட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து, பிறர் தியானிக்கச் செய்யுங்கள்!

 

Our Blog: http://graceindiaministries.blogspot.in/

E-Mail ID : graceindiaministries@gmail.com

Join on Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

GRACE India Ministries, +91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570

To Unsubscribe click here! 

 

0 comments:

Post a Comment