1 Jul 2013

02nd July 2013 << நற்செய்தி அறிவிப்போம் >>

MAY GRACE & PEACE OF OUR LORD JESUS CHRIST FILL US TODAY!

Having trouble viewing this email? READ HERE. Please add wordoflordtamil@gmail.com to your email address book.

WORD of  LORD

<< TO WALK WITH GOD TODAY & EVER >>

<< GRACE INDIA MINISTRIES >>

02nd  July 2013 (செவ்வாய்)

= இன்றைய வார்த்தை =

சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. (1 கொரி 9:16)

 

= இன்றைய சங்கீதப் பகுதி =

மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என் உதடுகளை மூடேன், கர்த்தாவே, நீர் அதை அறிவீர். (40:9)

 

= இன்றைய நீதிமொழி =

என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். (1:23)

= ன்றைய தியானம் =

 

<< நற்செய்தி அறிவிப்போம் >>

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!  சுவிசேஷம் அறிவிப்பது நம்மேல் விழுந்த கடமை மட்டுமல்ல, அது கிருபையும் கூட!

சர்வ வல்லமையுள்ள தேவன், தாம் நினைத்தால், தமது தூதர்களில் சிலரை ஒவ்வொரு நாடுகளுக்கும் அனுப்பி, நற்செய்தி அறிவித்து, அனேக அற்புதங்களையோ, அல்லது வாதைகளையோ கொடுத்து, ஒரே நாளில், எல்லா ஜனங்களையும்  மனந்திரும்ப வைக்க முடியும். ஆனால், அந்த நல்ல வேலைக்கு நம் ஒவ்வொருவரையும் நம்பி, ஏற்படுத்தியிருப்பாரானால், நாம் எவ்வளவு பாக்கியசாலிகள்?

அனைவரும் ஊழியம் செய்ய வாய்ப்பு உண்டு..

குடும்பமாய், குழுவாய் பிறருக்காக ஜெபிக்கலாம்.

எஸ்.எம்.எஸ். –மூலமாக வேத வசனங்கள் அனுப்பலாம்.

காணிக்கைகள் கொடுத்து தகுதியுள்ள ஊழியங்களைத் தாங்கலாம்.

சிறுவர், சிறுமியருக்கு கதைகள் மூலம் கிறிஸ்துவை அறிவிக்கலாம்.

படிக்கிற, வேலை செய்கிற இடங்களில் சாட்சியாக வாழ்ந்து கிறிஸ்துவை பறைசாற்றலாம்.

கர்த்தர் நமக்கு செய்த நன்மைகளை பிறரிடம் அறிவிக்கலாம்.

இயலாதோர்க்கு உணவு, உடை கொடுத்து கர்த்தரின் அன்பை பகிரலாம்.

முயற்சிக்கலாமா?

எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். (1 கொரி 9:22)  ஆமென்!

 

ஜெபம் செய்வோம் =

எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே! கிருபையாய் நீர் எங்களுக்கு கொடுத்திருக்கிற ஊழிய வாய்ப்புக்களுக்காக உமக்கு நன்றி! உயிருள்ளபோதே அவற்றைப் பயன்படுத்தி, ஆத்தும ஆதாயம் செய்ய ஞானத்தைத் தாரும். எங்களை அர்ப்பணிக்கிறோம்.  அன்பின் இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், நல்ல பிதாவே, ஆமென்!

= ங்கள் கவனத்திற்கு =

"கர்த்தரின் வார்த்தை" (WORD of LORD) தியானத்தை குறைந்தபட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து, பிறர் தியானிக்கச் செய்யுங்கள்!

 

Our Blog: http://graceindiaministries.blogspot.in/

E-Mail ID : graceindiaministries@gmail.com

Join on Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

GRACE India Ministries, +91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570

To Unsubscribe click here! 

 

0 comments:

Post a Comment