31 Jul 2013

1st August 2013 (வியாழன்) << கர்த்தரின் கரங்கள் >>

MAY GRACE & PEACE OF OUR LORD JESUS CHRIST FILL US TODAY!

Having trouble viewing this email? READ HERE. Please add wordoflordtamil@gmail.com to your email address book.

WORD of LORD

<< TO WALK WITH GOD TODAY & EVER >>

<< GRACE INDIA MINISTRIES >>

1st August  2013 (வியாழன்)

= இன்றைய வார்த்தை =

எங்களைப் பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரங்களினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, எங்களை இவ்விடத்துக்கு அழைத்துவந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்.(உபா 26:8,9)

 

= இன்றைய சங்கீதப் பகுதி =

பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.(136:12)

 

= இன்றைய நீதிமொழி =

சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள். 31:20)

= ன்றைய தியானம் =

<< கர்த்தரின் கரங்கள் >>

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!  கர்த்தரின் கரங்கள்….

நம்மை உண்டாக்கிற்று (சங்கீ 119:73)

கிரியை செய்கிறது (சங்கீ 19)

அழகானவைகள் (உன் 5:14)

பராக்கிரமம் செய்கின்றது (சங்கீ118:16)

எகிப்துக்கு (பாவிகளுக்கு) வாதை கொடுக்கிறது (யாத் 9:3)

பலத்த கரங்கள் (யோசு 4:23)

பெலிஸ்தியருக்கு விரோதமானது (1 சாமு 7:13)

ஒருமனப்படுத்துகிறது (2 நாளா 30:12)

எஸ்றா மேலும், எஸ்றாவோடும் இருந்து நடத்தியது(எஸ்றா 7)

எல்லாவற்றையும் செய்கிறது (யோபு 12:9)

கர்த்தராகிய இயேசுவின் கரங்கள்:

குஷ்டரோகியை தொட்டு சுகமாக்கினது, பிசாசுகளை துரத்தியது, காற்றையும் கடலையும் அடக்கியது. அற்புதங்கள் செய்தது. மரித்த சடலங்களை உயிரோடு எழுப்பியது. யூதாசையும் சினேகிதனே என்றழைத்து அணைத்தது. நமக்காய் ஆணிகளால் அடிக்கப்பட்டது. உயிரோடு எழுந்து, விண்ணகம் சென்றது. ஆளுகை செய்யும் கரமாய், நியாயத்தீர்ப்பு செய்யும் கரமாய் வரப்போகின்றது! இன்றும் கிருபையோடு இருக்கின்றது!

அவர் கரங்களுக்குள் அடைக்கலம் புகுவோமா?

அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார். (வெளி 5:7) ஆமென்!

 

ஜெபம் செய்வோம் =

அன்பின் பரலோகப் பிதாவே! உம்முடைய கரங்கள் எங்கள் மீது நன்மையாக இருப்பதற்காக நன்றி! எங்கள் கரங்களால், உம்முடைய கரங்களைப் பிடித்துக் கொள்கிறோம்! இந்த மாதம் முழுவதும் உமது பரலோகப் பாதையில் நடத்தும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்!

= ங்கள் கவனத்திற்கு =

(WORD of LORD) தியானத்தை ஒருவருக்காவது பகிர்ந்து, கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்!

Visit Us : http://graceindiaministries.blogspot.in/

E-Mail ID : graceindiaministries@gmail.com

Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

PREPARED AND DISTRIBUTED ONLY FOR CHRISTIANS THOSE WHO TRUST OUR ALMIGHTY & TRINITY GOD

GRACE India Ministries  (+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)

MAY GOD BLESS & LEAD YOU TODAY & EVER….

TO UNSUBSCRIBE , KINDLY REPLY US  AS "UNSUBSCRIBE"

 

29 Jul 2013

30’ July 2013 << நம் வீடு எப்படி இருக்கிறது? >>

MAY GRACE & PEACE OF OUR LORD JESUS CHRIST FILL US TODAY!

Having trouble viewing this email? READ HERE. Please add wordoflordtamil@gmail.com to your email address book.

WORD of LORD

<< TO WALK WITH GOD TODAY & EVER >>

<< GRACE INDIA MINISTRIES >>

30' July 2013 (செவ்வாய்)

= இன்றைய வார்த்தை =

என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும். (ஏசா 56:7)

 

= இன்றைய சங்கீதப் பகுதி =

உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.(101:2)

 

= இன்றைய நீதிமொழி =

நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு.(15:6)

= ன்றைய தியானம் =

<< நம் வீடு எப்படி இருக்கிறது? >>

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

இந்த குறிப்பிட்ட வீடு, கைகளால் கட்டப்பட்ட வீடு அல்ல! நமது சரீரமே அந்த வீடு! வீட்டுக்கு வாசல் இருப்பது போல, நமது சரீரத்துக்கும் ஒன்பது வாசல்கள் உண்டு! அந்த ஒன்பது வாசல்களுமே பரிசுத்தமாக இருக்கவேண்டும்; கர்த்தரின் சித்தத்தின்படி பயன்படுத்தப்பட வேண்டும்!

உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே. (1 கொரி 6:15)

"வாய்" என்ற ஒரு வாசலை எடுத்துக்கொண்டால், உண்ணவும், பேசவும் மட்டுமன்றி, இயேசுவின் நாமத்தை சொல்லி, தேவனைத் துதிக்கவும், பரிசுத்த ஆவியால் நிரம்பி, நவமான மொழிகளைப் பேசவும், பயன்படுத்தலாமே.

"கண்கள்" எதைப் பார்க்கின்றன? பரிசுத்தமா? அசுத்தமா?

"காதுகள்" எதைக் கேட்கின்றன? தேவ வார்த்தைகளையா? மற்ற அசுத்தங்களையா?

"நாசித்துவாரங்கள்" கர்த்தரால், ஜீவ சுவாசம் ஊதப்பட்ட இடமல்லவா? புகைப்பிடித்து விடும், புகைபோக்கியல்லவே!

பிற "வாசல்கள்" விபச்சாரத்துக்கோ, வேசித்தனத்துக்கோ அல்ல! தேவனாகிய கர்த்தரால் அனுமதிக்கப்பட்ட காரியங்களுக்கே அன்றி, வேறொன்றுக்கும் இல்லை!

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. (ரோமர் 12:1)

வீட்டின் நடு மையமாகிய "இருதயம்" ஜெபவீடாக இல்லையென்றால், நம் சரீரமாகிய வீடு "கள்ளர் குகை"யே அன்றி வேறொன்றுமில்லை! வீடு பரிசுத்தமாக இருந்தால்தான், "வீடுபேறு" எனப்படும் பரலோக வாழ்வு கிடைக்கும்!

"என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்" என்றார்.( மத் 21:13) ஆமென்!

 

ஜெபம் செய்வோம் =

அன்பின் பரலோகப் பிதாவே! எங்கள் வீடாகிய சரீரத்தை பரிசுத்தமாய்ப் பாதுகாக்க உதவி செய்யும். வாசல்கள் பரிசுத்தமாக இருக்கட்டும்! அசுத்தங்கள் நீங்க சுத்திகரியும்! எங்கள் சரீரமாகிய ஆலயம் மெய்யான ஜெபவீடாக இருக்கட்டும்! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்!

= ங்கள் கவனத்திற்கு =

(WORD of LORD) தியானத்தை ஒருவருக்காவது பகிர்ந்து, கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்!

Visit Us : http://graceindiaministries.blogspot.in/

E-Mail ID : graceindiaministries@gmail.com

Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

PREPARED AND DISTRIBUTED ONLY FOR CHRISTIANS THOSE WHO TRUST OUR ALMIGHTY & TRINITY GOD

GRACE India Ministries  (+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)

MAY GOD BLESS & LEAD YOU TODAY & EVER….

TO UNSUBSCRIBE , KINDLY REPLY US  AS "UNSUBSCRIBE"

 

28 Jul 2013

29’ July 2013 << அற்பம்? அற்புதம்! >>

MAY GRACE & PEACE OF OUR LORD JESUS CHRIST FILL US TODAY!

Having trouble viewing this email? READ HERE. Please add wordoflordtamil@gmail.com to your email address book.

WORD of  LORD

<< TO WALK WITH GOD TODAY & EVER >>

<< GRACE INDIA MINISTRIES >>

29' July 2013 (திங்கள்)

= இன்றைய வார்த்தை =

லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள். லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள். (ஆதி 29:31,32)

= இன்றைய சங்கீதப் பகுதி =

உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.(22:24)

 

= இன்றைய நீதிமொழி =

என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.(3:11)

= ன்றைய தியானம் =

<< அற்பம்? அற்புதம்! >>

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

அற்பமாக எண்ணப்படுகிறவர்களைக் கர்த்தர் காண்கிறார். (நாம் இருக்கின்ற சூழ்நிலையில்), படிக்கின்ற இடத்திலா? பணிபுரியும் இடத்திலா? ஊழியத் தளத்திலா? சகோதரர்கள் நடுவிலா? நண்பர்கள் கூட்டத்திலா? எங்கு, எவர் நம்மை அற்பமாக எண்ணிணாலும் சரி! கர்த்தராகிய இயேசு தமது அற்புதத்தின் மூலம் நம்மை உயர்த்த வல்லவர்.

நாம் செய்யவேண்டியது என்ன? அவரிடம் வந்து, நம்பிக்கையோடு, வேண்டிக்கொள்வது மட்டுமே! மனிதர்கள் நம்மேல் பரிதாபம்தான் கொள்ள முடியும். கர்த்தர் ஒருவரால்தான் நமது கேள்விகளுக்கெல்லாம் பதிலாக ஓர் அற்புதம் செய்யமுடியும்.

ஆதி 29:31,32 ல் லேயாள் கண்ட அற்புதம்!

நீதி 30:25 ல் எறும்பு பெற்ற சேமிக்கும் குணாதிசயம்!

அப்போஸ் 4:11 ல் இயேசு மூலைக்கு தலைக்கல்லான அற்புதம்!

1 கொரி 1:28 ல் இழிவானவைகள் தெரிந்துகொள்ளப்பட்ட அற்புதம்!

அற்பமாய் ஆடுமேய்த்த தாவீது அரசனாக மாறிய அற்புதம்!

அடிமையாய் இருந்த யோசேப்பு உயர்த்தப்பட்ட அற்புதம்!

அற்பமாய் எண்ணப்பட்ட யோபு, மீண்டும் துளிர்த்தெழுந்த அற்புதம்!

அடிமைத்தனமான வாழ்விலும், மேன்மைபெற்ற தானியேல் கண்ட அற்புதம்!

இன்றும் நம்மை மாற்ற காத்திருக்கிறது. நம் நேசரை நோக்கிக் கூப்பிடுவோமா?

இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்( மத் 18:10) ஆமென்!

 

ஜெபம் செய்வோம் =

அன்பின் பரலோகப் பிதாவே! அற்பமாய் எண்ணப்படுகின்ற எங்கள் வாழ்வில் ஓர் அற்புதம் செய்யப்போவதற்காக ஸ்தோத்திரம்! உம்மை நோக்கிக் கூப்பிடுகிறோம். உயர்த்தும்! வழி நடத்தும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்!

= ங்கள் கவனத்திற்கு =

"கர்த்தரின் வார்த்தை" (WORD of LORD) தியானத்தை குறைந்தபட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து, பிறர் தியானிக்கச் செய்யுங்கள்!

Visit Us : http://graceindiaministries.blogspot.in/

E-Mail ID : graceindiaministries@gmail.com

Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

PREPARED AND DISTRIBUTED ONLY FOR CHRISTIANS THOSE WHO TRUST OUR ALMIGHTY & TRINITY GOD

GRACE India Ministries (+91 99524 27477, +91 9843724467, +91 99945 99677, +91 99940 16570)

TO UNSUBSCRIBE , KINDLY REPLY AS "UNSUBSCRIBE"

MAY GOD BLESS & LEAD YOU TODAY & EVER….

 

26 Jul 2013

27’ July 2013 << எது ஞானம்? >>

MAY GRACE & PEACE OF OUR LORD JESUS CHRIST FILL US TODAY!

Having trouble viewing this email? READ HERE. Please add wordoflordtamil@gmail.com to your email address book.

WORD of  LORD

<< TO WALK WITH GOD TODAY & EVER >>

<< GRACE INDIA MINISTRIES >>

27' July 2013 (சனி)

= இன்றைய வார்த்தை =

கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது. (சங்கீதம் 104:24)

 

= இன்றைய சங்கீதப் பகுதி =

உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.(119:100)

 

= இன்றைய நீதிமொழி =

ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான். (13:1)

= ன்றைய தியானம் =

<< எது ஞானம்? >>

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

வாலிபன் ஒருவன், புதிய இருசக்கர வாகனம் வாங்கினான். அரசாங்க விதிகளின்படி ஓட்டுனர் உரிமம் பெற்றான். தலைக்கு அணியும் ஹெல்மெட் ஒன்றும் வாங்கினான். சில நாட்களுக்குப் பிறகு நடந்த விபத்தில் அந்த வாலிபன் தலையில் மாத்திரம் அடிபட்டு உயிரிழந்தான். காரணம் தான் தலையில் அணிந்திருக்கவேண்டிய ஹெல்மெட்டை, தன் வீட்டில் ஆணியில் மாட்டி வைத்திருந்தான்.

அரசாங்கவிதிப்படி எல்லாம் வாங்குவது நல்ல ஞானம்தான். ஆனால், அதைப் பயன்படுத்துவதே சிறந்த ஞானம்.

நம்மை இந்த பாவ உலகில் இருந்து மீட்டெடுக்கும் வார்த்தைகள் அடங்கிய வேதபுத்தகம் எத்தனைபேர் வீட்டில், உறங்கிக்கொண்டு இருக்கிறது?. ஜெபிக்காமல், முழங்கால்கள் பலவீனமாய்ப் போனதால்தான், வாழ்க்கை தள்ளாடிக்கொண்டு இருக்கிறது.

கர்த்தர் தமது சகல கிரியைகளையும் ஞானமாகவும், ஞானமாய் நடக்கும்படியும் படைத்திருக்கிறார். ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல! அவருடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு! அவர்களுக்கு இடறலில்லை! அல்லேலூயா! படிப்போம் ஞானமாய் நடந்து, பரலோகம் சேர்வோம்!

ஞானமுள்ளவனுக்கு ஒப்பானவன் யார்? காரியத்தின் தாற்பரியத்தை அறிந்தவன் யார்? மனுஷனுடைய ஞானம் அவன் முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அவன் முகத்தின் மூர்க்கம் மாறும்.(பிரசங்கி 8:1) ஆமென்!

 

ஜெபம் செய்வோம் =

அன்பின் பரலோகப் பிதாவே! ஞானமாய் எங்களைப் படைத்தவரே, உமக்கு நன்றி! பொல்லாப்பை விட்டு விலகி ஞானமாய் நடக்கவும், உமது வேதத்தை நேசித்து, கீழ்ப்படியவும் உதவி செய்து வழி நடத்தும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்!

= ங்கள் கவனத்திற்கு =

"கர்த்தரின் வார்த்தை" (WORD of LORD) தியானத்தை குறைந்தபட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து, பிறர் தியானிக்கச் செய்யுங்கள்!

Visit Us : http://graceindiaministries.blogspot.in/

E-Mail ID : graceindiaministries@gmail.com

Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

PREPARED AND DISTRIBUTED ONLY FOR CHRISTIANS THOSE WHO TRUST OUR ALMIGHTY & TRINITY GOD

GRACE India Ministries (+91 99524 27477, +91 9843724467, +91 99945 99677, +91 99940 16570)

TO UNSUBSCRIBE , KINDLY REPLY AS "UNSUBSCRIBE"

MAY GOD BLESS & LEAD YOU TODAY & EVER….

 

25 Jul 2013

26’ July 2013 << ஜீவனோடு… >>

MAY GRACE & PEACE OF OUR LORD JESUS CHRIST FILL US TODAY!

Having trouble viewing this email? READ HERE. Please add wordoflordtamil@gmail.com to your email address book.

WORD of  LORD

<< TO WALK WITH GOD TODAY & EVER >>

<< GRACE INDIA MINISTRIES >>

26' July 2013 (வெள்ளி)

= இன்றைய வார்த்தை =

நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டோ? (உபாகமம் 5:26)

 

= இன்றைய சங்கீதப் பகுதி =

என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? (42:2)

 

= இன்றைய நீதிமொழி =

புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.(4:13)

= ன்றைய தியானம் =

<< ஜீவனோடு… >>

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

செத்த மீன்கள் நீரோட்டத்தால் அடித்துச்செல்லப்படும்! உயிருள்ள மீன்களோ நீரோட்டத்தை எதிர்த்து நீந்திச் செல்லும்! நாம் ஜீவனுள்ள கர்த்தரின் மீன்கள்! இந்த உலக வழக்கங்கள், பாவப் பழக்கங்கள்! கோணலும் மாறுபாடுமான காரியங்கள்! இச்சைகள்! காமவிகாரங்கள்! மாம்சத்தின் கிரியைகள்! ஆகிய அனைத்தையும், விசுவாசத்தோடும், தேவன் தரும் பரிசுத்த ஆவியின் பலத்தோடும், இயேசு கிறிஸ்து என்னும் பெயரிலுள்ள அதிகாரத்தையும் பயன்படுத்தி, எதிர்த்து வெல்ல வேண்டும். கர்த்தரை நோக்கி, நம் வாழ்க்கைப் பயணம் செல்லவேண்டும். தொடக்கமும், முடிவும் கர்த்தராகிய இயேசுவே! அவரே வழியும், சத்தியமும், ஜீவனுமானவர்! மேலும், (அவர்)

தேவன் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார் என்றார்.(மத்22:32) ஆமென்!

 

ஜெபம் செய்வோம் =

அன்பின் பரலோகப் பிதாவே! நீர் ஜீவனுள்ளவர், எங்களுக்காய் ஜீவன் தந்தவர்! இன்றும் ஜீவிக்கின்றவர்! அந்த ஜீவனோடு, அசுத்தங்களை எதிர்த்து வெற்றிகொள்ள உதவிடும்! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்!

= ங்கள் கவனத்திற்கு =

"கர்த்தரின் வார்த்தை" (WORD of LORD) தியானத்தை குறைந்தபட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து, பிறர் தியானிக்கச் செய்யுங்கள்!

Visit Us : http://graceindiaministries.blogspot.in/

E-Mail ID : graceindiaministries@gmail.com

Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

PREPARED AND DISTRIBUTED ONLY FOR CHRISTIANS THOSE WHO TRUST OUR ALMIGHTY & TRINITY GOD

GRACE India Ministries (+91 99524 27477, +91 9843724467, +91 99945 99677, +91 99940 16570)

TO UNSUBSCRIBE , KINDLY REPLY AS "UNSUBSCRIBE"

MAY GOD BLESS & LEAD YOU TODAY & EVER….