இன்றைய வார்த்தை > நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; (நீதி 24:16) இன்றைய சங்கீதப் பகுதி > அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்.(36:12) இன்றைய நீதிமொழி > சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? (6:9) இன்றைய தியானம் > கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நீதிமான் விழுந்துபோவதற்கும் வாய்ப்புள்ளது! அது பின்மாற்றவாழ்வே! தேவனுக்கு பிரியமில்லாதவைகளின்மேல் பிரியப்படுதல் விழவைக்கும்! தான் விழ காரணம் தன் இச்சைகளே! ஏழு தரம் விழ நேர்ந்தாலும், கர்த்தரோ கிருபையாய் எழ வைக்கிறார்! தூசியை உதறிவிட்டு எழுவோம்! நாம் பிரகாசிக்கவேண்டியவர்கள்! விழுதல், எழுதல் என்ற இரண்டுக்கும் இடையில் உள்ள ஒன்று, கர்த்தர் நம் கரத்தைப் பிடித்துத் தூக்கிவிடுகிறார் என்பதுவே! வியாதிப்படுக்கை; தோல்விப் படுக்கை! வறுமை ஆகியன மாறட்டும்! கர்த்தரின் கரம் பிடித்து எழுந்து பிரகாசிப்போம்! இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான்.(மாற்கு 9:27) ஆமென்! இன்றைய ஜெபம் > அன்பின் பரலோகப் பிதாவே! உம் வார்த்தைகளுக்கு நன்றி! விழுந்து கிடந்த நிலையை மன்னியும்! எழுந்து பிரகாசிக்க உதவி செய்யும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கரம்பிடித்து நடக்க உதவிசெய்யும்! சர்வவல்லவர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே! ஆமென். உங்கள் கவனத்திற்கு > கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக! "கர்த்தரின் வார்த்தை" (WORD of LORD) தின தியானத்தை குறைந்தபட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள். ஜெப உதவிகளுக்குக் கீழே உள்ள எண்களில் தொடர்புகொள்ளுங்கள்! ஆமென்! Visit Our WebPage: http://graceword.wix.com/tamil Visit Our Blog: http://graceindiaministries.blogspot.in/ E-Mail ID : graceindiaministries@gmail.com Join on Facebook : http://www.facebook.com/groups/wordoflord/ கர்த்தரின் பணியில் GRACE INDIA MINIStRIES (+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570) |
0 comments:
Post a Comment