கர்த்தராகிய இயேசு கிறிஸ்து : " என் கிருபை உனக்குப் போதும்! " ( 2கொரி 12:9 )
WORD OF LORD
<<< DAILY DEVOTION BY GRACE MINISTRIES (INDIA) >>>
<< விசேஷித்த ஞானம் >>
உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன். (தானியேல் 5:14)
பெல்ஷாத்சார் எனும் பாபிலோன் ராஜா, கர்த்தரின் தாசனாகிய தானியேலைக் குறித்து சொல்லிய வார்த்தைகள்! (வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்.)
கர்த்தருடைய கண்களுக்கு முன் பரிசுத்தமாய் நடந்த வாலிபன் தானியேலின் ஞானம் தலைமுறை கடந்து, பெல்ஷாத்சார் எனும் ராஜாவுக்கு தெரிய வந்தது என்றால், கர்த்தர் தானியேலை எவ்வளவு விசேஷித்த ஞானத்தால் நிரப்பியிருந்திருப்பார்! புதிய கல்வியாண்டுக்குள் பிரவேசிக்க இருக்கும் நம் பிள்ளைகளும், நாம் ஒவ்வொருவரும் அப்படிப்பட்ட விசேஷித்த ஞானத்தைப் பெற்றுகொள்ள வேண்டாமா?
வெளிச்சம் – வேதத்தைப் படித்து தியானித்து கைக்கொள்ளும்போது கிடைக்கும்.
புத்தி – பொல்லாப்பை விட்டு (பாவம் செய்வதைவிட்டு) விலகுவதால் கிடைக்கும்(யோபு 28:28)
ஞானம் – கர்த்தருக்கு பயப்படுதலும், தீமைவிட்டு விலகுதலும் ஆகும்.
மேற்கண்ட 3 காரியங்களும் இணையும்போது கர்த்தரின் கிருபையினால் அது, "விசேஷித்த ஞானமாக" மாறுகிறது!
போட்டிகள் நிறைந்த படிப்பு உலகம், வேலை வாய்ப்புக்கள், வேகமான உலகம்! இதில் நம் பிள்ளைகளுக்கு கர்த்தர் அருளும் விசேஷித்த ஞானமே அவர்களை தப்பிப் பிழைக்க வைக்கும்! நன்றாக படிக்க வைக்கும்! இச்சைகள், பாவங்கள், தவறான நட்புக்கள், ஆலோசனைகள், பாலிய குற்றங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும். ஜெபத்தோடு பள்ளிக்கும், கல்லூரிக்கும் அனுப்புவோம், கர்த்தருக்கு நேராக நடத்துவோம்! கர்த்தரே நம் பிள்ளைகளையும், நம்மையும் "விசேஷித்த ஞானத்தால்" நிரப்புவாராக! ஆசீர்வதிப்பாராக!
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.(யாக்கோபு 1:5)
ஆமென்!
ஜெபம் செய்வோமா?
அன்பின் பரலோகப் பிதாவே! உமக்கு ஸ்தோத்திரம்! நீர் எங்கள் பிள்ளைகளுக்கும், எங்களுக்கும் தரப்போகிற விசேஷித்த ஞானத்துக்காய் நன்றி! இந்த கல்வியாண்டில் அனைவரும் சிறந்து விளங்க கிருபை தாரும்! படிப்புக்கான தேவைகளை சந்தியும்! சர்வவல்லவர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே! ஆமென்.
உங்கள் கவனத்திற்கு!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக! "கர்த்தரின் வார்த்தை" (WORD of LORD) தியானத்தை குறைந்தபட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து
கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள்.
உங்கள் ஜெப உதவிகளுக்குக் கீழே உள்ள எண்களில் தொடர்புகொள்ளுங்கள்! ஆமென்!
Visit our WebPage: http://graceind.wix.com/grace
E-Mail ID : graceindiaministries@gmail.com
Join on Facebook : http://www.facebook.com/groups/wordoflord/
GRACE ministries(india)
(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)
10 Jun 2013
Re: 10th June 2013 << விசேஷித்த ஞானம் >>
Posted on 12:13 am by TheBIBLE Secrets
Th's Brother
very useful words
2013/6/9 "WORD of LORD" <wordoflordtamil@gmail.com>
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment