31 May 2013

1st June 2013 << பலவீன விசுவாசம் >>

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து : " என் கிருபை உனக்குப் போதும்! " ( 2கொரி 12:9 )

WORD OF LORD

<<<   DAILY DEVOTION BY GRACE MINISTRIES (INDIA)  >>>

<< பலவீன விசுவாசம் >>

"அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை"     (ரோமர் 4:19)

அல்லேலூயா! விசுவாசத்தின் தந்தை ஆபிரகாமின் தேவனுக்கு மகிமை! அவர் பெற்றிருந்த விசுவாசம் பலவீனமான அல்ல! பலமுள்ள விசுவாசம். அவர் வளர்ந்த குழந்தையைப் போல அது வேண்டாம், இது வேண்டாம் என அடம் பிடிப்பவராகவோ, அல்லது இதுதான் வேண்டும், அதுதான் வேண்டும் என நச்சரிக்கிறவராகவோ அல்ல! புதிதாய்ப் பிறந்த குழந்தையைப்போல, கபடமில்லாமல் தகப்பன் சொல்லும் "அனைத்துக்கும்" கீழ்ப்படிய மனதுள்ளவராக இருந்தார். அதைத்தான் கர்த்தரும் விரும்புகிறார்.

"தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்".(ரோமர் 4:18)

கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் வாக்குத்தத்தங்கள், அல்லது நாம் அவரிடம் விண்ணப்பித்திருக்கும் வேண்டுதல்கள்; எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் விஷேசித்த நன்மைகள், நம் வாழ்வில் நடக்கவும், கிடைக்கவும் ஏதுவில்லாதிருக்கும்போது சூழ்நிலைகளைப் பார்த்து நாம் விசுவாசத்தில் பலவீனமடைந்துவிடுகிறோம். எனவே எதையும் பெற்றுக்கொள்ளாதிருக்கிறோம். ஆபிரகாம் ஐயா வேறு எதுவும் செய்யவில்லை. ஆனால் தன் விசுவாசம் பலவீனமடையாதபடி கர்த்தரை முழுமையாக நம்பிவிட்டார்! பெற்றுக்கொண்டார்!

தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம் --பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.(ரோமர் 4: 20,21)

நம் இருதயமும் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி வாழுமானால், நாமும் அனேக ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பது நிச்சயம்! விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை விசுவாசத்தில் பலப்படுத்துவாராக!

"..(ஆபிரகாம்) விசுவாசத்தில் வல்லவனானான்" (ரோமர் 4:21)

 ஆமென்!

 

ஜெபம் செய்வோமா?

அன்பின் பரலோகப் பிதாவே!  உமது வழிகாட்டுதல்களுக்காக நன்றி! எங்களை விசுவாசத்தில் பலப்படுத்தும்! தடைபட்டிருக்கிற நன்மைகளைப் பெற்று உம்மையே மகிமைப்படுத்த உதவி செய்யும்! சர்வவல்லவர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே! ஆமென்.

உங்கள் கவனத்திற்கு!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக! "கர்த்தரின் வார்த்தை" (WORD of LORD) தின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து எங்களோடு கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள்.

உங்கள் ஜெப உதவிகளுக்குக் கீழே உள்ள எண்களில் தொடர்புகொள்ளுங்கள்! ஆமென்!

 Visit our WebPage: http://graceind.wix.com/grace

E-Mail ID : graceindiaministries@gmail.com

Join on Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

GRACE ministries(india)

(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)

 

30 May 2013

31st May 2013 << சமாரிய விசுவாசி >>

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து : " என் கிருபை உனக்குப் போதும்! " ( 2கொரி 12:9 )

WORD OF LORD

<<<   DAILY DEVOTION BY GRACE MINISTRIES (INDIA)  >>>

<< சமாரிய விசுவாசி >>

அந்த ஸ்திரீ அவரை நோக்கி: "கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்" என்றாள். (யோவான் 4:25)

சமாரியா ஸ்திரீ என்றவுடனே, அந்த பெண் எப்படிப்பட்டவர்? அவர் தொழில் என்ன? எந்த நிலையில் இருந்தார்? என்றெல்லாம் நமக்கு (சிந்தையில்) தோன்றும். (ஏனென்றால் நாம் மிகப் பரிசுத்தர்கள் அல்லவா?) ஆனால் அவர்களுக்குள் இருந்த ஆவிக்குரிய மேன்மைகளை உலகுக்கு எடுத்துக் காட்டவே ஆண்டவர் இயேசு அன்றைக்கு சமாரியாவுக்கு வந்து யாக்கோபின் கிணற்றினருகே அமர்ந்தார்.

(யோவான் 4:5 முதல் 42 வரை படித்து தியானிக்க!)

உலகின் பார்வையில் சமாரியா ஸ்திரீ:

) அவர் ஒரு அசுத்த வாழ்வு கொண்ட விபச்சாரி

) 5 புருஷர்கள் இருந்தார்கள். இப்போது 6 வது ஆளுடன் வாழ்க்கை

) தாழ்ந்த சமாரியப் பெண்

) ஊராரால் ஒதுக்கப்பட்டவர்

கர்த்தரின் பார்வையில் சமாரியா ஸ்திரீ:

) கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்

) "ஆண்டவரே" என அழைத்து கிறிஸ்துவை மரியாதை செய்தவர்

) முற்பிதாவாகிய யாக்கோபை நம்முடைய பிதா என அறிக்கை செய்தவர்

) எனக்கு ஜீவத்தண்ணீரைத் தாரும் என கர்த்தர் இயேசுவை வேண்டிக்கொண்டவர்

) ஆணாதிக்கத்தின் அடிமைத்தனத்தில் வாழ்ந்தவர்

) சரியான தொழுகை பற்றி கேட்டறிந்தவர்

) கிறிஸ்து எனப்படும் மேசியாவின் வருகை, அவரது போதனைகள் குறித்து அறிந்திருந்தவர்

) கிறிஸ்துவை, மேசியாவாக, தீர்க்கதரிசியாக  ஏற்றுக்கொண்டவர்

) ஊரார் அனைவருக்கும் நடந்ததைச் சொல்லி, அனைவரையும்  கர்த்தரிடம் அழைத்துவந்தவர்.

) சமாரியராகிய அந்த ஊரார் அனைவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க காரணமானவர்!

இப்படி உலகம் பார்க்கிறவிதம் வேறு! ஆண்டவர் பார்க்கிற விதம் வேறு! நமது பார்வையும் கிறிஸ்துவின் பார்வையாக இருக்கட்டும்! கிறிஸ்துவின் சிந்தை நமக்கு உண்டாவதாக!

 

எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். (லூக்கா 7:16)

ஆமென்!

 

ஜெபம் செய்வோமா?

அன்பின் பரலோகப் பிதாவே!  பிறரைக் குறித்த எங்களின் பார்வை கிறிஸ்துவைப்போல இருப்பதாக! எந்த ஒருவரையும் நாங்கள் குற்றமாய்ப் பாராமல் காத்தருளும்! எங்களையும் நீர் அப்படி மேன்மையாகப் பார்ப்பதற்காக நன்றி! சர்வவல்லவர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே! ஆமென்.

உங்கள் கவனத்திற்கு!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக! "கர்த்தரின் வார்த்தை" (WORD of LORD) தின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து எங்களோடு கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள்.

உங்கள் ஜெப உதவிகளுக்குக் கீழே உள்ள எண்களில் தொடர்புகொள்ளுங்கள்! ஆமென்!

 Visit our WebPage: http://graceind.wix.com/grace

E-Mail ID : graceindiaministries@gmail.com

Join on Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

GRACE ministries(india)

(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)

 

29 May 2013

30th May 2013 << ஆம்! இல்லை! >>

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து : " என் கிருபை உனக்குப் போதும்! " ( 2கொரி 12:9 )

WORD OF LORD

<<<   DAILY DEVOTION BY GRACE MINISTRIES (INDIA)  >>>

<< ஆம்! இல்லை! >>

"உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.(மத்தேயு 5:37)

ஒரு சில நாட்டு வைத்தியசாலைகளில், குறிப்பிட்ட வியாதிகளுக்கு மருந்து கொடுக்கும்போது சில குறிப்புகளையும் சொல்லிக்கொடுப்பார்கள்! அதில் ஒன்று "இந்த மருந்தை உண்ணும்போது குரங்கை நினைக்காமல் உண்ணுங்கள்" என்பது! இப்படி சொல்லிக்கொடுத்தால், எங்கே குரங்கை நினைக்காமல் உண்ணமுடியும்? வைத்தியர்கள் இவ்வாறாகச் சொல்கிறார்கள், "இந்த மருந்தை உண்ணும்போது குரங்கை நினைக்க வேண்டும். ஆனால் எல்லா மனிதர்களுமே எதைச் செய்யச் சொல்கிறோமோ அதை செய்யமாட்டார்கள்! எதை செய்யக்கூடாதெனச் சொல்கிறோமோ அதைச் செய்வார்கள்! எனவேதான் அப்படி எதிர் மறையாகக்கூறி சரிசெய்கிறோம்" என்று! இதுதான் இன்றைய உலகம்!

நம் வேத வார்த்தைகளைப் பொறுத்தவரை உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் ( Yes for Yes & No for No) தான் கூறவேண்டும் என நம் கர்த்தர் இயேசு கிறிஸ்து கட்டளையிட்டிருக்கிறார்! அவரிடத்தில் மாறுதலும் இல்லை! வேற்றுமையின் நிழலும் இல்லை! அதுதான் உண்மைக் கிறிஸ்தவனுக்கும் அடையாளம்! கர்த்தரின் வார்த்தைகளுக்கு எந்த ஒரு வார்த்தையும் பேசாமல், அப்படியே கீழ்ப்படிவதே நல்லது! அவருக்குக் கீழ்ப்படிவது என்பது, அவரிடம்  அன்புகூர்வதாகும். கீழ்ப்படிந்தால், மேன்மை உண்டு! அல்லேலூயா!

கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்  (பிலி 2: 15,16)

ஆமென்!

 

ஜெபம் செய்வோமா?

அன்பின் பரலோகப் பிதாவே!  உம் நல்ல வார்த்ட்கைகளுக்காக நன்றி! வாயின் தாறுமாறுகளை எங்களை விட்டு அகற்றும்! எல்லாவற்றிலும் புத்தியாய் நடக்க பெலன் தாரும்! சர்வவல்லவர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே! ஆமென்.

உங்கள் கவனத்திற்கு!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக! "கர்த்தரின் வார்த்தை" (WORD of LORD) தின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து எங்களோடு கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள்.

உங்கள் ஜெப உதவிகளுக்குக் கீழே உள்ள எண்களில் தொடர்புகொள்ளுங்கள்! ஆமென்!

 Visit our Website: http://graceind.wix.com/grace

E-Mail ID : graceindiaministries@gmail.com

Join on Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

GRACE ministries(india)

(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)


28 May 2013

29th May 2013 << அன்பின் அடிகள்! >>

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து : " என் கிருபை உனக்குப் போதும்! " ( 2கொரி 12:9 )

WORD OF LORD

<<<   DAILY DEVOTION BY GRACE MINISTRIES (INDIA)  >>>

<< அன்பின் அடிகள்! >>

"இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்"       (யோபு 5:17)

ஒரு சிறுவனின் தாயும் தகப்பனும், அவனுடைய சிறு வயதிலேயே மரித்துப்போனதால், அச்சிறுவனை அவனுடைய பெரியப்பா எடுத்து வளர்க்கலானார். அவருக்கும் ஒரு சிறு மகன் இருந்தான். அவர் தனது சொந்த மகன் குறும்பு செய்யும்போதெல்லாம் சிறு சிறு அடியும் அடிப்பார். வளர்ப்பு மகனையோ, அவ்வாறு அடிக்காமல், மனம் கஷ்டப்படுவானே என நினைத்து, ஏதேனும் புத்திமதி மட்டும் சொல்லி விட்டுவிடுவார். ஆனால் மற்ற கவனிப்பு முறைகளில் எந்த ஒரு  வித்தியாசமும் இல்லை. அவ்வாறே பல வருடங்கள் உருண்டன. பிள்ளைகள் வாலிபர்கள் ஆனார்கள்! ஒருநாள் அந்த வளர்ப்பு மகன் கடும் சோகத்தில் ஆழ்ந்திருந்தான். கண்ணீரோடு தன் வளர்ப்பு அன்னையிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்ததை அந்த தந்தை கவனித்தார். அவன் இவ்வாறாக சொல்லிக் கொண்டிருந்தான்.. "நீங்கள் என் மீது அன்போடும் பாசத்தோடும் நடந்துகொள்ளவே இல்லை! ஆனால், தம்பியிடமோ மிகுந்த அன்போடு இருந்தீர்கள்! அவனை அடித்தீர்கள், என்மீதோ உங்கள் கரங்கள் படக்கூட இல்லை! நான் என்ன பாவம் செய்தேன் அம்மா! சொல்லுங்கள்!'' என! தந்தை செய்வது அறியாது நின்றார்!

ஆம் பிரியமானவர்களே, ஒரு பிரியமான தகப்பனாய் நம் கர்த்தர் இருப்பதால்தான், சில நேரங்களில் அவர் நம்மை நம் தவறுகளுக்காகச் சிட்சிக்கிறார்! அடிக்கிற அவர் கரங்கள், பிறகு நம்மை அணைத்து, காயமும் கட்டுகிறது! நாமோ அதைப் புரிந்துகொள்வதே இல்லை! (அந்த அன்பை கர்த்தரின் உண்மையான பிள்ளைகளால் புரிந்துகொள்ள முடியும்!) இப்போது இருக்கும் எந்த ஒரு இக்கட்டான சூழலையும் கண்டு சோர்ந்து போகவேண்டாம். நாம் ஒரு அன்புத் தகப்பனின் கரங்களுக்குள் இருக்கிறோம்! அல்லேலூயா

தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.(நீதி 3:12)

நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.(வெளி 3:19)

ஆமென்!

 

ஜெபம் செய்வோமா?

அன்பின் பரலோகப் பிதாவே! உம் சிட்சைகளுக்காக நன்றி! நீர் எங்கள் தகப்பனாகவும், நாங்கள் உமது பிள்ளைகளாகவும் இருப்பதற்காகவும், அந்த மேலான அன்புக்காகவும்  ஸ்தோத்திரங்கள்! தொடர்ந்து எங்களை உம் அன்போடே வழி நடத்தும்! சர்வவல்லவர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே! ஆமென்.

உங்கள் கவனத்திற்கு!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக! "கர்த்தரின் வார்த்தை" (WORD of LORD) தின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து எங்களோடு கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள்.

உங்கள் ஜெப உதவிகளுக்குக் கீழே உள்ள எண்களில் தொடர்புகொள்ளுங்கள்! ஆமென்!

 Visit our Website: http://graceind.wix.com/grace

E-Mail ID : graceindiaministries@gmail.com

Join on Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

GRACE ministries(india)

(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)

 

27 May 2013

28th May 2013 << மிகவும் சிறியதுதான்! >>

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து : " என் கிருபை உனக்குப் போதும்! " ( 2கொரி 12:9 )

WORD OF LORD

<<<   DAILY DEVOTION BY GRACE MINISTRIES (INDIA)  >>>

<< மிகவும் சிறியதுதான்! >>

"பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள்."       (யாக்கோபு 1:15,16)

ஓர் மலைப்பிரதேசத்தில் சுமார் 65 பேரைச் சுமந்துகொண்டு  ஒரு பேருந்து பயணித்துக்கொண்டிருந்தது. ஒரு கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது, யாரும் எதிர்பாராமல், திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி பெரும் விபத்துக்குள்ளானது. அனேக உயிர் பலிகள்! காயங்கள்; இரத்தங்கள்! விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்டறிந்தனர். பேருந்து நன்றாகத்தான் இருந்தது. அதன் பராமரிப்பு முறைகளும் சரியாகவே இருந்தது. ஆனால் அதன் "பிரேக்" பகுதியை இணைக்கும் ஒரே ஒரு உதிரிபாகம் மட்டும் காணவில்லை. சற்று தளர்வாக இருந்ததால் எங்கோ கழன்று விழுந்து, விபத்து ஏற்பட்டிருந்தது!

நல்ல தொழிலில் எங்கோ ஒருவரின் தவறு முழு நிறுவனத்தின் நற்பெயரையும் கெடுத்துவிடும். நல்ல படிப்பாளிதான் ஆனால் ஒரே ஒரு தவறான நட்பு படிப்பையே கெடுத்துவிடும்! நல்ல ஊழியம்தான். ஆனால், ஒரே ஒரு தவறு மொத்தமாகக் கவிழ்த்துவிடும்! விசுவாச வாழ்வு நன்றாகவே போய்க்கொண்டிருக்கும். ஆனால் எங்கோ சிறு இச்சை குளறுபடி செய்துகொண்டிருக்கும். நல்ல திரைப்படம்தானே! சின்ன ஜாலிதானே என, நமக்கு நாமே சான்றிதழ் கொடுத்து பார்த்துவிடுவோம். ஆனால் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல ஏதோ ஒன்று நம் இருதயத்தில் ஒட்டிக்கொள்ளும். ஏற்ற வேளையில் தன் வேலையைக் காண்பிக்கும்.

கர்த்தர் இயேசுவில் வேறூன்றி, நிலைத்து நிற்கமுடியாமல் தடுத்து நிறுத்தும் அந்த சிறு இச்சை; தவறு, பாவம் எதுவென அறிந்து, அது கர்ப்பம் தரித்து ஆவிக்குரிய மரணம் சம்பவிக்கும் முன்னே தடுத்து நிறுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்து நல்லவழியிலே நம்மை நடத்துவாராக! ஒரு சிறு ஓட்டை முழு கப்பலையுமே மூழ்கடித்துவிடும்! எச்சரிக்கை! மோசம் போகாதிருப்போம்!

உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். (1 யோவான் 2:17)

ஆமென்!

 

ஜெபம் செய்வோமா?

அன்பின் பரலோகப் பிதாவே! உம் நல்ல வார்த்தைகளுக்காக நன்றி! சிறு சிறு தவறுகளும், எந்த ஒரு இச்சையும் எங்களிடம் இராதபடி காத்தருளும். மீறுதல்களை மன்னித்து, பரிசுத்தப்படுத்தும். உம் வார்த்தைகளில் எங்களை ஸ்திரப்படுத்தும்! சர்வவல்லவர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே! ஆமென்.

உங்கள் கவனத்திற்கு!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக! "கர்த்தரின் வார்த்தை" (WORD of LORD) தின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து எங்களோடு கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள்.

உங்கள் ஜெப உதவிகளுக்குக் கீழே உள்ள எண்களில் தொடர்புகொள்ளுங்கள்! ஆமென்!

 Visit our Website: http://graceind.wix.com/grace

E-Mail ID : graceindiaministries@gmail.com

Join on Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

GRACE ministries(india)

(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)